
அதிமுக நிறுவன தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாள் விழா.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி,
அரியமங்கலம் பகுதி கழகத்தில்எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் எம்ஜிஆரின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி, மரியாதை செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து அதிமுக கொடியினை ஏற்றி அன்னதானம் வழங்கினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை 43.வது வட்ட கழக செயலாளர் ஆர்.பி.ஜி.கணேசன் அவர்கள் மற்றும் வட்ட நிர்வாகிகள் மேற்கொண்டனர்.
நிகழ்ச்சியில் அரியமங்கலம் பகுதி கழக செயலாளர்கள் தண்டபாணி, பொதுக்குழு உறுப்பினர் சாந்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சுரேஷ்குமார், வட்ட கழக செயலாளர்கள் சத்தியசீலன், ரவி, சங்கர், வெங்கடேசன், மணி, சோமசுந்தரம், முத்துக்குமார், மற்றும் கழக நிர்வாகிகள் தீபம் ஆறுமுகம், நவநீதகிருஷ்ணன், துரை, சீனிவாசன், ராம் வெங்கடேஷ்,
.பாலு, ஐயப்பன், சரசு, தனபால், ஓரந்தை ஜெயராஜ், முருகேசன், அரவிந்த், கேபிள் முத்துக்குமார், பழக்கடை ராஜேஷ், மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கோபிநாத், ரமேஷ்குமார், மனோகர், ஜானகிராமன், ராஜ், ஹரீஷ், மற்றும் பகுதி கழக, வட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணியை சார்ந்த நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

