ஜீயபுரம் அருகே
5 பவுன் நகைக்காக நர்ஸ் கொலை பெண் கைது.
திருச்சியை அடுத்த முத்தரசநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ராதா (வயது 70). ராதா திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ராதாவிற்கு ரஜினி (45) என்ற மகன் உள்ளார். இவர் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் கலெக்டராக பணியாற்றி வருகிறார். பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு சென்ற தனது மனைவியை பார்க்க ரஜினி சென்று இறந்தார்.
இதனால், கடந்த 3-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த ராதாவை கொலை செய்துவிட்டு வீட்டை பூட்டிவிட்டு மர்ம நபர் சென்றுவிட்டார்.
தகவல் அறிந்து வீட்டுக்கு வந்த ரஜினி, தன்னிடம் இருந்த சாவியால் கதவை திறந்து பார்த்த போது, வீட்டில் தாயார் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த 5 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தன.
இதுகுறித்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ராதாவுக்கு சொந்த ஊர் லால்குடியை அடுத்த ஆலம்பாக்கம் என்பதும், ஆலம்பாக்கத்தை சேர்ந்த திருமேனி என்பவரின் மனைவி காந்தி முத்தரசநல்லூர் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதும், அப்போது ராதாவுடன் பழக்கம் ஏற்பட்டதால் அவரது வீட்டுக்கு அடிக்கடி வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார், காந்தியை பிடித்து நடத்திய விசாரணையில், நகைக்காக ராதாவை கொலை செய்தது அம்பலமானது. இதைத்தொடர்ந்து போலீசார் காந்தியை கைது செய்து அவரிடம் இருந்து நகைகளை மீட்டனர். பின்னர், அவரை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.