Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி:13 வயது மாணவிக்கு ஆபாச வீடியோ காண்பித்து பாலியல் தொல்லை: ஊட்டி வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது.

0

'- Advertisement -

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில்
ஆபாச வீடியோவை காண்பித்து 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
பக்கத்து ஊட்டி வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது.

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவருக்கு 13 வயதில் ஒரு சிறுமி உள்ளார். இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கந்தசாமியின் வீட்டின் அருகே உள்ள ஒரு நபரது வீட்டுக்கு ஊட்டி குன்னூர் பரலையாறு பகுதியைச் சேர்ந்த முரளிதரன் (வயது 21) அவர்களின் உறவுக்கார வாலிபர் ஒருவர் வந்தார்.
அந்த வாலிபர் 3 நாட்கள் அங்கு தங்கியிருந்தார். அப்போது கந்தசாமியின் மகள் அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது முரளிதரன் அடிக்கடி கந்தசாமி வீட்டுக்கு சென்று வந்தார். பக்கத்து வீட்டு உறவுக்கார பையன் என்பதால் கந்தசாமி அதனை கண்டு கொள்ளவில்லை.

இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் இல்லாத நேரத்தில் தனது செல்போனில் இருந்த ஆபாச வீடியோக்களை அந்த சிறுமிக்கு காண்பித்து அவரது இடுப்பு மற்றும் மார்பு பகுதியில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

கடந்த 25ம் தேதி முதல் 27 ம் தேதி வரை இந்த கொடுமை அரங்கேறி உள்ளது.
பின்னர் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து வழக்கம் போல் சிறுமி பள்ளிக்குச் சென்றார். அப்போது சக தோழிகளிடம் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை தொடர்பாக தெரிவித்தார். இது பள்ளியின் வகுப்பு ஆசிரியைக்கு தெரிய வந்தது. உடனடியாக அவர் மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.

அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் ஆபாச வீடியோவை காண்பித்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குன்னூர் முரளிதரனை போக்ஸ்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.