போட்டோ, வீடியோகிராபர் சங்கத்திற்கு தனிநல வாரியம் அமைக்க வலியுறுத்தி அமைச்சரிடம் மனு வழங்குவது என ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்.
திருச்சி மாவட்ட வீடியோ மற்றும் போட்டோகிராபர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மாவட்ட
தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக மாநில ஆலோசகர் வீரமணி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இதில் மாவட்ட செயலாளர் பிரபு, பொருளாளர் நாகேந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் தமிழ்நாடு வீடியோ மற்றும் கலைஞர் நல கூட்டமைப்பின் சார்பில் 7 மற்றும் 8ம்தேதி நடைபெற உள்ள முதல் மாநில மாநாட்டில் திருச்சி மாவட்டத்திலிருந்து திரளாக கலந்து கொள்கிறது புரியும், போட்டோ மற்றும் வீடியோகிராபர் அவர்களின் வாழ்க்கை மேம்படுத்தும் வகையில் தனி நல வாரியம் அமைப்பதற்கான மனுவை அளிப்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.