திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் பொது மக்களுக்கு மரக்கன்றுகள்
மாற்றம் அமைப்பினர் வழங்கினர்.
திருச்சி எடமலைபட்டிபுதுர் பகுதியில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் எடமலைபட்டிபுதுரில் உள்ள குழந்தை இயேசு ஆலைய வளாகத்தில் பழ வகையிலான மரகன்றுகள் வழங்கும் நிகழ்வு மற்றும் நடும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் குழந்தை இயேசு திருத்தலத்தை சேர்ந்த பங்குதந்தை அந்தோணி இருதயராஜ் கலந்து கொண்டு கொய்யா, நெல்லி, விலாம் பழம் உள்ளிட பழவகையிலான மரகன்றுகளை பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் அமைப்பின் நிர்வாகிகள் மகளிர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா விளையாட்டு பிரிவு செயலாளர் தடகள பயிற்ச்சியாளர் சுரேஷ் பாபு அன்பியத்தின் செயலாளர் சேவியர் இளைஞர் பிரிவு செயலர்கள் பார்திபன் கார்த்தி அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ. தாமஸ் மற்றும் சிலம்ப விளையாட்டு மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் முடிவில் ஆலய வளாகத்தில் விலாம் பழம்,நெல்லி உள்ளிட்ட பழவகையிலான மரகன்றுகள் நடப்பட்டது.