திருச்சி விமான நிலையத்தில் பால் பவுடருக்குள் மறைத்து எடுத்து வந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள தங்கம் பிடிபட்டது.
திருச்சி விமான நிலையத்தில்
ரூ 8 லட்சம் மதிப்புள்ள தங்கத்துடன் பயணி சிக்கினார்
சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை.
சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு இன்று காலை ஏர் இந்தியா விமானம் வந்தது. பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு சங்க இலாகா அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது பயணிகளின் உடைமைகளை சோதனை இட்டதில் ஒரு பயணி பால் பவுடருக்குள் மறைத்து வைத்து 147 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவற்றின் மதிப்பு 8 லட்சம் ஆகும்.