போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்படும் பாமக பிரமுகரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு.
காவல்துறை தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்படும்
பா.ம.க. பிரமுகரின் உடல் பிரேத பரிசோதனை திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம்
காசாங் கோட்டையில் கடந்த 26-ம் தேதி நடந்த தடியடி வழக்கில் அருண்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக இவரது மாமனார் பா.ம.க. பிரமுகரான செம்புலிங்கம் (வயது 54) என்பவரிடம் விக்கிரமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் கடுமையான காயம் ஏற்பட்ட செம்புலிங்கம்
அரியலூர் அரசு மருத்துவமனையிலும், அதன் பின்னர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தார் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து செம்புலிங்கத்தின் குடும்பத்தார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்.
தஞ்சை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மருத்துவ கல்லுரி மருத்துவர்களை கொண்ட சிறப்பு குழுவை நியமித்து – அரியலூர் விவசாயியான பாமக பிரமுகர் செம்புலிங்கம் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் இன்று நண்பகல் 12 மணிக்குள் பிரேத பரிசோதனை முடித்து உடலை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது உயர்நீதிமன்றம்.
மனுதரார் தரப்பில் மருத்துவர் அல்லாத ஒரு பிரதிநிதியை பிரேத பரிசோதனையின் போது அனுமதிக்க வேண்டும் எனவும் பிரேத பரிசோதனை முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் நீதிபதி சந்திரசேகரன் உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் செம்புலிங்கம் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய மனு மீது காவல்துறை பதில் அளிக்கவும் உத்தரவு பிரிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுப்படி இன்று காலை 10.15 மணிக்கு செம்புலிங்கம் உடல் பிரேத பரிசோதனை தொடங்கியது. பின்னர் 11 45 மணியளவில் போலீசார் அவரது உடலை மகன் மணிகண்டன் இடம் வழங்கினர்.
முன்னதாக பிரேத பரிசோதனையை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்ட பாமக செயலாளர் உமாநாத் வன்னியர் சங்க துணை தலைவர் கதிர் ராஜா, தொழிற்சங்க பிரதிநிதி பிரபாகர், பாஸ்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உறவினர்கள் திரண்டு இருந்தனர்.
அவர்கள் செம்புலிங்கத்தின் உடலுக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது உடல் அரியலூர் கொண்டு செல்லப்பட்டது.