Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

0

'- Advertisement -

 

திருச்சி மத்திய மாவட்ட
பாட்டாளி மக்கள் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம்.

திருச்சி மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் ஆய்வுக்கூட்டம்
மாவட்ட செயலாளர் க.உமாநாத் தலைமையில் புத்தூரில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் சரவணன் மற்றும் மாநில வன்னியர் சங்க துணை தலைவர் கதிர் ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஜான் ரஸ்கின், மாவட்ட அமைப்பு செயலாளர் கிள்ளிவளவன், மாவட்ட அமைப்பு தலைவர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் மாநில பொருளாளர் கவிஞர்.திலக பாமா கலந்து கொண்டு நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து பேசினார்.

முன்னதாக
புத்தூர் பகுதி செயலாளர் ஆ.செந்தில் குமார் வரவேற்றார். ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அன்பு மணி தம்பிகள் படை யினர் மற்றும் மாணவர் சங்க நிர்வாகிகள் மற்றும் அன்பு மணி தங்கைகள் படை யினர் மற்றும் மகளிர் அணி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட நகர, ஒன்றிய,பேரூர் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.