போலீசார் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு.
திருச்சியில் தனியார் மருத்துவமனை முற்றுகை.
அரியலூர் மாவட்டம் காசாங் கோட்டையை சேர்ந்தவர்
செம்பலிங்கம் (வயது 54 ). இவருக்கு மனைவியும் ,ஒரு மகனும்,மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது.
இந்த நிலையில் அரியலூரில்,
கடந்த மாதம் 26 ம் தேதி நடந்த ஒரு அடிதடி வழக்கில் அவரது மருமகன் மணிகண்டன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பாக விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது செம்பலிங்கம் மற்றும் அவர் குடும்பத்தினரை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது.
போலீஸ் தாக்கியதில் படுகாயம் அடைந்த செம்பலிங்கம் அரியலூர் அரசு மருத்துவமனையில் மூன்று தினங்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பின்னர் வீடு திரும்பினார்.
ஆயினும் அவரது உடல்நிலை சரியாகாத சூழலில்
நேற்று செம்பலிங்கம் திருச்சி மாருதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆயினும்
சிகிச்சை பலனளிக்காத நிலையில் செம்பலிங்கம்
இறந்துவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் மருத்துவமனை
முன்பாக போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் அவர்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார்.
போலீஸ் தாக்கியதால் தான் செம்பலிங்கம் பலியானதாகவும், தாக்குதல் நடத்திய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் செம்பலிங்கம் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தற்போது செம்பலிங்கம் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ளது.நாளை அரியலூரில் இருந்து மேஜிஸ்திரேட் வந்தவுடன் காலை 10 மணி அளவில் பிரேத பரிசோதனை நடைபெறும்.அதன் அறிக்கைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்த பின் உறவினர்கள் கலைந்து சென்று உள்ளனர்.