திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே
உரக்கடையை உடைத்து பணம் கொள்ளை .
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உரக்கடையை உடைத்து ஒரு லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மரம் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி கீழ தேவதானம் எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி கல்பனா (வயது 50). இவர் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே கரூர் பைபாஸ் சாலையில் உரக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார் .மறுநாள் (நேற்று) காலையில் வந்து பார்க்கும்போது பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உடனே உள்ளே சென்று பார்த்தார்.அங்கு பார்த்தபோது ஒரு லட்சம் ரூபாய பணம் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது .இது குறித்து கல்பனா கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார் .
புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.