Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஓய்வு பெற்ற பல்கலைக்கழக ஊழியரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு.

0

திருச்சி பெரிய கடை வீதியில் ஓய்வு பெற்ற பல்கலைக்கழக ஊழியரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு.

திருச்சி பெரிய கடை வீதியைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 63). இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவருக்கும் இவரது சகோதரருக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வருகிறது. இது தொடர்பாக வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ரவீந்திரனின் சகோதரர் ராஜாராமின் மகன் வினோத்குமார் மற்றும் செல்வி ஆகியோர் ரவீந்திரனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் வினோத்குமார், செல்வி ஆகிய இருவர் மீதும் கோட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சட்டநாதன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.