திருச்சி அரிஸ்டோ மேம்பால பாலக்கட்டையில் மோதி வாலிபர் பரிதாப சாவு.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் முகமது. இவரது மகன் ஆஷிக் முகமது (வயது 26). இவர் தனது இரு சக்கர வாகனத்தில் அரிஸ்டோ மேம்பாலத்தில் எடமலைப்பட்டி புதூரில் இருந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது பாலத்தின் சைடில் உள்ள சுவற்றில் மோதி விட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து எடமலைப்பட்டி புதூர் கிராம நிர்வாக அதிகாரி தீபன் ராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி போக்குவரத்து புலனாய்வு பிரிவு தெற்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.