திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மினி மராத்தான் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியை சுகாதார பணிகள் துணை இயக்குனர் துவங்கி வைத்தார்.
திருச்சி மாவட்ட கலெக்டர் வளாகத்தில் தொடங்கிய இம்மாரத்தான் போட்டியை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார். மொத்தம் ஐந்து கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த மாரத்தான் போட்டி நீதி நீதிமன்றம், மாநகராட்சி, தலைமை தபால் நிலையம், டிவிஎஸ் டோல்கேட் வழியாக சென்று துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலக வாயிலில் முடிவு பெற்றது.

போட்டியில் மொத்தம் 240 பேர் கலந்து கொண்டனர். முதல் பரிசு ஆண்கள் முகமது அசாருதீன் வையம்பட்டி வட்டாரம், இரண்டாம் பரிசு சந்தோஷ் மணச்சநல்லூர் வட்டாரம்,
மூன்றாம் பரிசு பெர்னாட் ஷா வையம்பட்டி வட்டாரம்.
பெண்கள் முதல் பரிசு கிருத்திகா வையம்பட்டி வட்டாரம், இரண்டாம் பரிசு ரோகினி மருங்காபுரி வட்டாரம். மூன்றாம் பரிசு புஷ்பவல்லி மருங்காபுரி வட்டாரம் ஆகியோர் பரிசுகளை பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்டம் சுகாதார பணிகள் துணை இயக்குனர் மருத்துவர். சுப்ரமணி பரிசுகளை வழங்கினார்.
ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ஸ்ரீராம் மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.