திருச்சி மத்திய பஸ் நிலையத்தில்
ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே கோஷ்டி மோதல்
2 பேருக்கு காயம்.
திருச்சி மத்திய பஸ் நிலையம் வ. உ. சி. சாலையில் காமராஜர் சிலை எதிரில் 2 ஆட்டோ தொழிற்சங்கங்கள் இயங்கி வருகின்றன. இதில் சமீபத்தில் பிரிந்து சென்ற ஆட்டோ டிரைவர்களுக்கும், ஏற்கனவே சங்கத்தில் இருக்கும் பழைய உறுப்பினர்களுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் இன்று சவாரி ஏற்றுவதில் அவர்களுக்கு இடையே தகராறு மூண்டது. இதில் தென்னூர் பகுதியைச் சேர்ந்த ஜலில், கோரிமேடு பகுதியைச் சேர்ந்த பாலு ஆகிய இரண்டு ஆட்டோ டிரைவர்கள் தாக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட நபர்களின் சங்கத்தைச் சார்ந்த ஆட்டோ டிரைவர்கள் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தை இன்று முற்றுகையிட்டனர்.
பின்னர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வீரமணி அந்த ஆட்டோ டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து ஆட்டோ டிரைவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.