திருச்சி மாவட்டம் துறையூர் தங்க நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவரஞ்சனி (வயது16). இவர் மீது
புக் ஷோ வழக்கு பதிவு செய்யப்பட்டதில் மீட்கப்பட்டு கடந்த 12ஆம் தேதி கே.கே.நகர் நாகம்மையர் குழந்தைகள் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் நேற்று திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் மருத்துவமனையில் இருந்து திடீரென மாயமாகினார்.
இது குறித்து கே.கே.நகர் நாகம்மையர் குழந்தைகள் காப்பக கண்காணிப்பாளர் சாந்தி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.