Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ராமஜெயம் கொலை வழக்கு: இன்று திருச்சி நீதிமன்றத்தில் 13 பேர் ஆஜர்.

0

ராமஜெயம் கொலை வழக்கு:
13 பேர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்.

திருச்சியில், ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக, உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வழக்கில் தொடர்புடையவர் 13 பேர் திருச்சி மாஜிஸ்திரேட் எண் 6 கோர்ட்டில் அஜர்படுத்தப்பட்டனர்.

நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012ம் ஆண்டு, மார்ச் 29ம் தேதி, மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
திருச்சியில் இருந்து, கல்லணை செல்லும் சாலையில், அவரது உடல் கம்பிகளால் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

கொலை சம்பவம் தொடர்பாக, ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
அந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் மற்றும் சி.பி.ஐ., விசாரணை நடத்தியும் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், ராமஜெயத்தின் மற்றொரு சகோதரர் ரவிச்சந்திரன் என்பவர், கொலையாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று சென்னை, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதன்படி, துாத்துக்குடி மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையிலான குழு விசாரணை நடத்தினர். 1000க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி, சந்தேகப்படும்படியான 20க்கும் மேற்பட்டவர்களைவிசாரணை வளையத்தில் கொண்டு வந்தனர்.

கடந்த 22ம் தேதி, அவர்களை, சி.பி.சி.ஐ.டி., டி.ஜி.பி., ஷகில் அக்தர் முன்னிலையில் ஆஜர்படுத்தி, கடலூர் சிறையில் அடைத்தனர். அப்போது, கொலை வழக்கு தொடர்பான விசாரணையில் கிடைக்கும் ஆதாரங்கள், குறிப்புகள் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்தார்.
ஏற்கனவே, நீதிமன்ற அனுமதி பெற்று, ராமஜெயத்திடம் உதவியாளர்களாக இருந்த மோகன், ஜெயக்குமார் ஆகியோரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில், ரவுடிகள் சாமிரவி, திண்டுக்கல் மோகன்ராம், சீர்காழி சத்தியராஜ், கணேசன், மாரிமுத்து உட்பட 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்காக, நவ., 1ம் தேதி இன்று, 13 திருச்சி ஜூடிசியல் 6 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்படும் விசாரணைக்கு பின், ராமஜெயம் கொலை வழக்கில் திருப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது, என்று போலீசார் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.