பாலியல் தொந்தரவு கொடுத்து இணையத்தில் பரப்பி விடுவதாக மிரட்டும் உடன்பிறந்த சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி கலெக்டரிடம் இளம் பெண் மனு
திருச்சி காந்தி மார்க்கெட் தாரநல்லூர் பகுதியை சேர்ந்தவர் புனிதா (வயது 40) இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரது இரண்டாவது கணவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். புனிதாக்கு உடன் பிறந்த இரண்டு சகோதரர்கள் உள்ளனர். அவர்கள் புனிதாவின் கணவர் ஆட்டோ டிரைவருடன் சேர்ந்து புனிதாவின் பெயரில் உள்ள சொத்தை அபகரிப்பதற்காக புனிதாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து இணையதளத்தில் பரப்பி விடுவதாக மிரட்டுகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து புனிதா காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
இதை தொடர்ந்து இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டரை சந்தித்து தன்னை மிரட்டுவார்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்துள்ளார்.