திருச்சி வடக்கு, தெற்கு, மத்திய மாவட்ட தி.மு.க செயல் வீரர்கள் கூட்டத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும், தி.மு.க முதன்மை செயலாளருமான கே.என்.நேரு பேச்சு –
ஆளுநர் எதிர்கட்சியை போல் செயல்படுகிறார்.
இந்த ஆட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் நோக்கத்தோடு பா.ஜ.க வினர் செயல்படுகிறார்கள்.
திமுகவும். அதிமுகவும் அண்ணன் தம்பிகள் இவர்களை மீறி யாரும் தமிழகத்தில் ஆட்சி செய்ய முடியாது.
அ.தி.மு.க இரண்டாக பிரிந்துள்ளது. அவர்கள் இடத்தை பிடித்து விட வேண்டும் என்கிற நோக்கத்தில் பா.ஜ.க வினர் அ.தி.மு.க வை ஒன்று சேர விடாமல் பார்த்து கொள்கிறார்கள்.
இன்று உள்ள அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயந்து கொண்டு இருக்கிறார்கள்.
எனவே நாம் இப்பொழுது பலமாக இருப்பதை போல் பலமாக இருந்து நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றி 40 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும். திருச்சியில் வெற்றி பெற்றால் அது தமிழ்நாட்டின் அனைத்து இடங்களின் வெற்றியையும் தீர்மானிக்கும்.
தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்:-
நேற்று மற்ற நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு நான் சென்னைக்கு சென்றேன், அப்போது எனக்கு தொலைபேசியில் நம்முடைய கழகத்தினுடைய முதன்மை செயலாளர் தொடர்பு கொண்டு நாளை மத்திய மாவட்ட செயல் வீரர் கூட்டம் நடைபெற இருக்கின்றது. நீ கண்டிப்பாக வரவேண்டும் என்று சொன்னார், அப்போது நாளைக்கு எனக்கு சென்னையில் 10:00 மணிக்கு ஒரு நிகழ்ச்சி, 3 மணிக்கு ஒரு நிகழ்ச்சி இருக்கு முடிச்சிட்டு நாளை இரவு தான் திருச்சி வருவேன் என்று சொன்னென். நீ வந்தால் நல்ல இருக்கும் என்று சொல்லிவிட்டு போனை கட் பன்னிவிட்டார். பின்பு அடுத்த நிமிஷம் எங்களுடைய துறை சார்ந்திருக்கின்ற அதிகாரிகளிடம்,பேசினேன் நான் ஒன்னே ஒன்னு தான் சொன்னேன் தொலைபேசியில் அழைத்தது அண்ணன் முதல்ல நம்முடைய நிகழ்ச்சியை அனைத்தையும்,இரண்டு நாள் தள்ளி வைங்கன்னு சொல்லிட்டு மறுபடியும் தொலைபேசியில் சொன்னேன் அண்ணா நான் கண்டிப்பா நாளைக்கு வந்துவிடுகிறேன் என்று.
மாண்புமிகு அமைச்சர் அண்ணன் அவர்கள் தேர்தல் முன்பாக எத்தனை இடங்கள் நாம் வெற்றி பெறுவோம் ,அது எப்படி எல்லாம் நாம் வெற்றி பெற வேண்டும் என்பதை சொன்னது அப்படியே நடந்தது . ஏன் என்றால் சொன்னவர் ஏதோ ஆறுதல் சொல்பவர் அல்ல, ஆற்றல்மிகு செயலாளர் நம்முடைய மாண்புமிகு அமைச்சர் அண்ணன் அவர்கள் அவருடைய அந்த அனுபவம் அவர் சொல்ல வைத்திருக்கின்றது.
திருச்சி மாவட்டம் என்ன நினைக்கிறது அதுதான் தமிழ்நாடு நினைக்கும் அப்படின்னு நம்முடைய மாண்புமிகு அமைச்சர் அண்ணன் சொன்னார். அது உண்மை.
எங்களை பொறுத்த வரைக்கும் எங்களது திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தை பொறுத்தவரைக்கும் நாங்கள் அவரை பார்ப்பது ஒரு துரோணாச்சாரியாக தான் பார்க்கின்றோம்.
அமைச்சர் அண்ணன் நேரு அவர்கள் ஏகலைவன் தான் .
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற நாம் அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் அனைத்து இடங்களையும் கட்சி நிர்வாகிகள் கட்சியை பலப்படுத்த உழைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் மதுரை கோயம்புத்தூர் போன்ற பெரிய மாநகராட்சி போன்று திருச்சி விரைவில் வளர்ச்சி அடையும் அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை மாண்புமிகு அமைச்சர் அண்ணன் நேரு அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதுதான் நடக்கும் அதற்கு அனைவரும் கட்டுப்பட்டு உறுதுணையாக செயல்படுவோம், என்றார்