திருவரங்கத்தில்
சிறுமியை கடத்தி கர்ப்பமாக்கிய வாலிபர் .

திருச்சி நடு கொண்டையம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்.சம்பவத்தன்று இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். இந்த நிலையில் திடீரென்று அந்த சிறுமியை அழைத்துக்கொண்டு திருச்சி பெரிய கடையை வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் திருமணம் செய்து கொண்டு அவரை அழைத்துக்கொண்டு சென்னைக்கு சென்று விட்டார். இந்நிலையில் சென்னையில் சில மாதங்கள் வாழ்ந்தனர். இந்தநிலையில் சிறுமி கர்ப்பமானார்.
இது குறித்து அவரது பெற்றோர் புகார் தெரிவித்ததை தொடர்ந்து திருச்சி அந்தநல்லூர் யூனியன் சமூக நல அதிகாரி திருவரங்கம் மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.