திருச்சியில் தனியார் மதுபான காசாளருக்கு கொலை மிரட்டல்.
2பேர் கைது.
திருச்சி கருமண்டபம் பகுதியில் தனியார் கிளப் (மனமகிழ் மன்றம்) உள்ளது. இந்த கிளப்பில் மதுபான பார் உள்ளது. சம்பவத்தன்று கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 23 ) ஹேமேஸ்வரன் (வயது 22) கணேசமூர்த்தி (வயது 47 ) கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த வீர கணேஷ் (வயது 26) ஆகிய நான்கு பேர் அங்கு மதுபானம் குடிக்க சென்றனர்.
இந்த நிலையில் அவர்கள் அங்கு தகராறு செய்து காசாளர் பாலுவிற்கு கொலை மிரட்டல் விடுத்து அவர் பாக்கெட்டில் இருந்த 1500 ரூபாய் பணத்தை திருடிக்கொண்டு ஓடிவிட்டனர்.
இது குறித்து பாலு
கன்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஹேமேஸ்வரன், கணேசமூர்த்தி ஆகிய இரண்டு பேரை கைது செய்துள்ளனர். ஆனந்தகுமார் வீரகணேசன் ஆகிய இரண்டு பேரை தேடி வருகின்றனர்.