Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இளம் பெண் மாயம், கூலித் தொழிலாளி தற்கொலை.

0

 

திருச்சி தில்லைநகரில்
தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் திடீர் மாயம்.

திருச்சி பொன்மலை கணேசபுரம் 6 -வது தெருவில் வசித்து வருபவர் கோவிந்தராஜ் (வயது 44). இவரது மகள் ஜீவிதா. இவர் தில்லை நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டே
பி ஃபார்ம் படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இவர் வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை கோவிந்தராஜ் பொன்மலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாயமான ஜீவிதாவை வருகின்றனர்.

மனைவியுடன் தகராறு: ஸ்ரீரங்கத்தில் மதுவுக்கு அடிமையான கூலி தொழிலாளி தூக்குப்போட்டு சாவு.

திருச்சி திருரங்கம் அம்பேத்கர் நகர் புது காலனி பகுதியில் வசித்து வருபவர் லட்சுமி (வயது 60). இவருடைய மகன் விக்னேஷ் (வயது 32) கூலி வேலை செய்து வந்தார். இவர் மதுவுக்கு அடிமையாகி தொடர்ந்து குடித்துவிட்டு மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவர் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளானவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து லட்சுமி திருவரங்கம் காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.