Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வேலை இல்லாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.

0

திருச்சி உறையூரில் வேலை இல்லாத விரக்தியில்
குடி போதைக்கு அடிமையானவர் தூக்கு போட்டு தற்கொலை.

திருச்சி உறையூர் பாளையம் பஜார் கொச மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் மணிவண்ணன். (வயது 41). இவருக்கு ரெகுலராக வேலை இல்லை. இதனால் விரக்தியில் இருந்த அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்.

இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த மணிவண்ணன் நேற்று வீட்டு மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி நிர்மலா கொடுத்த புகாரின் அடிப்படையில் உறையூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.