திருச்சியில் வ உ சி யின் பிறந்தநாளையொட்டி அதிமுக மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.
அதிமுக பொதுச்செயலாளரரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும்., தமிழ்நாடு முன்னாள் முதலருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க.
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150.வது பிறந்த நாளையொட்டி..
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் அவர்கள் தலைமையில்..
திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில்..
செக்கிலுத்த செம்மலின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் எஸ் கே டி கார்த்திக், பொன்மலை பகுதி செயலாளர் பாலசுப்ரமணியன், மாவட்ட துணை செயலாளர் சுபத்ரா தேவி, மாவட்ட மீனவரணி செயலாளர் பொன்னுசாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக், மாவட்ட பாசறை செயலாளர் அருண் நேரு, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராஜமணிகண்டன், முன்னாள் அரசு வழக்கறிஞர் சின்னத்துரை, சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர் சகாதேவ் பாண்டியன், வட்ட செயலாளர்கள் சத்தியசீலன், ஆபிரகாம், ராஜா,
மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த பிரசன்னகுமார், கோபிநாத், தங்கராஜ், ரமேஷ், மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், கிளை வட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.