48 வது வார்டில் அடிப்படை பணிகளில் சுணக்கம்.கவுன்சிலரின் நடவடிக்கையை தடுப்பது எம்.எல்.ஏ இனிக்கோவா? மேயரா?
திருச்சி மாநகராட்சி 48 வது வார்டு கவுன்சிலரும்,திமுகபொன்மலை பகுதி செயலாளருமான கொட்டப்பட்டு இ.தர்மராஜ் தினந்தோறும் 48வது வார்டு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு மக்களின் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் தீர்த்து வைத்து வருகின்றார்.
48 வது வார்டில் ரங்கா நகர் மெயின் ரோட்டில் சாக்கடை மேனுவல்கள் 3 காணாமல் போய் பல வாரங்கள் ஆகின்றது. ரோட்டில் நடுவில் பள்ளம் இருப்பது தெரியாமல் சிறுவர்கள் சைக்கிளிலும், பெரியவர்கள் இருசக்கர வாகனத்திலும் தெரியாமல் அந்த பள்ளத்தில் சிக்கி விழ்ந்து சிறு காயங்களுடன் வீழ்ந்து எழுந்து சென்று வருகின்றனர்.
யாராவது வேகமாக வந்து விழுந்து உயிர் பலி ஏற்படும் முன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது ஒப்பந்ததாரர்கள் பாஸ்கர் மற்றும் கிஷோர் ஆகியோரின் அலட்சிய போக்கு தான் காரணம்.தரமற்ற முறையில் சாலை மற்றும் அமைத்துள்ளதால் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இது குறித்த புகாரின் பேரில் மாமன்ற உறுப்பினர் தர்மராஜ் மாநகராட்சி அதிகாரிகளிடமும் பேசி உடனடியாக அவற்வை சரி செய்வதாக கூறினார்.

அதிகாரியிடம் கவுன்சிலர் தர்மராஜ் பலமுறை முறையிட்டோம் இப்பணிகள் குறித்து அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை.
இது குறித்து 48 வது வார்டு பொதுமக்களிடம் கேட்டபோது பழைய 33 ஆவது வார்டில் (தற்போது 48வது வரர்டு) யாரும் ஓட்டு போட்டு நான் வெற்றி பெறவில்லை இதனால் அந்த வார்டு மக்களுக்கு எதுவும் செய்ய மாட்டேன் என ஓப்பனாக கூறியவர் கிழக்கு தொகுதி எம்எல்ஏவும். கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவருமான இனிகோ இருதயராஜ் .
கொட்டப்பட்ட தர்மராஜ் அரியமங்கலம் கோட்ட தலைவராக தேர்ந்தெடுக்கபட்ட நிலையில் திடீரென கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் மாவட்ட தலைவரின் மனைவியை கோட்டத் தலைவராக அறிவிக்கப்பட முக்கிய காரணமாக இருந்தவர் இனிகோ இருதயராஜ்.
இதனால் கோட்ட தலைவரின் ஆதரவும் கவுன்சிலருக்கு கிடையாது.
இது இல்லாமல் 48வது வார்டு மாவட்டச் செயலாளராக அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உள்ளார்.
அமைச்சர் மகேஷ் அவர்களை தவிர்க்க வேண்டும் என்ற காரணத்தினால் அவரது தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் அடிப்படை வசதிகளை செய்ய மாநகராட்சி மேயர் அன்பழகன் தடை விதித்து உள்ளாரா என தெரியவில்லை என 48வது வார்டு பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.
அமைச்சர்,மேயர், எம் எல் ஏ,கோட்டத் தலைவர், கவுன்சிலர் இவர்கள் எந்த கட்சியை சார்ந்து வேண்டும் என்றாலும் இருக்கலாம் எந்த நபர்களின் ஆதரவுடன் இருந்தாலும் பொதுமக்களின் அடிப்படையை பூர்த்தி செய்வதே அவர்களின் கடமை ஆகும்.
எனவே திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு மேலும் விபத்துக்கள் எதுவும்
நடைபெறம் முன் உடனடியாக மேனுவலை மாற்றி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவார்கள் என அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.