திருச்சியில்
ரெயில்வே குட்செட் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்.
திருச்சி ரெயில்வே குட் செட்டில் லாரிகள் பாதுகாப்பாக நிறுத்த இடவசதி செய்து தர வேண்டும், பார்க்கிங் இல்லாததால் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகளில் இருந்து பேட்டரிகள் மற்றும் உதிரி பாகங்கள் திருடப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே ரெயில்வே முதுநிலை கமர்சியல் மேலாளர், மாவட்ட கலெக்டர் விரைந்து ரெயில்வே நிர்வாகத்திடம் பேசி பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தரக்கோரி கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த நிலையில் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.
இதையடுத்து குட்செட்டில் லாரி உரிமையாளர்கள் திடீரென்று ஒன்று கூடி சங்க பொருளாளர் சங்கர் தலைமையில் கூட்டம் நடத்தினர் இந்த கூட்டத்தில் வருகின்ற 30ந் தேதி வரை ரெயில்வே நிர்வாகம் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அக்டோபர் 1ந்தேதி முதல் உண்ணாவிரதம் மற்றும் காலவரையற்ற போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்தனர்.
பிறகு லாரி உரிமையாளர்கள் சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.