Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் முன்னாள் எம்எல்ஏ மருமகளிடம் ஓடும் பஸ்ஸில் செயின் பறிப்பு.

0

'- Advertisement -

திருச்சியில் முன்னாள் எம்எல்ஏ மருமகளிடம் ஓடும் பஸ்ஸில் நகை பறிப்பு.

திருச்சியில் முன்னாள் எம்எல்ஏவின் மருமகளிடம் ஓடும் பஸ்ஸில் நகை பறித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

பட்டப் பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

Suresh

திருச்சி திருவானைக்காவல் மேல விபூதி பிரகாரத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரது தந்தை ராஜகோபால்.இவர் கடந்த 1967-ல் திருச்சி மாவட்டம் பழைய மன்னச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர்.

திருநாவுக்கரசுவின் மனைவி ஞானாம்பாள் (வயது 72 ). இவர் திருவானைக்காவலில் இருந்து டவுன் பஸ்ஸில் சத்திரம் பஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து ஜங்ஷன் செல்லும் பஸ்ஸில் ஏறி உறையூரில் உள்ள உறவினர் ஒருவரின் துக்க காரியத்திற்கு செல்வதற்காக உறையூர் பஸ் ஸ்டாப்பில் இறங்கினார்.

அப்போது கழுத்தில் கிடந்த ஐந்து பவுன் தங்கச் சங்கிலியை காணவில்லை. இதுகுறித்து உறையூர் போலீசில் புகார் கொடுத்தார்.

போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.