திருச்சி சங்கிலியாண்டபுரத்தில்
இடத்தகராறில் சித்தப்பாவை சரமாரியாக தாக்கிய வாலிபர்.
திருச்சி செந்தண்ணீர்புரம் திரு.வி.க. தெருவை சேர்ந்தவர் பிரசன்னா. இவரது மனைவி ஆணி (வயது 39). பிரசன்னா லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான இடத்தை விற்றுள்ளார்.
இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் லோடுமேன் பிரசன்னாவை அவரது அண்ணன் பாஸ்டின் என்பவரது மகன் டேவிட் (வயது 22) என்பவர் இரும்பு ராடால் தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த பிரசன்னா திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து பிரசன்னாவின் மனைவி ஆனி பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் பெயரில் சப் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் டேவிட் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.