
திருச்சி நீதிமன்ற வாளகத்தில் அமைந்துள்ள துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அதிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளுக்கு சனிக்கிழமை மின் வினியோகம் இருக்காது.
இது குறித்து மின்வாரிய தென்னூர் செயற்பொறியாளர் பா. சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது :
திருச்சி நீதிமன்ற வாளகத்தில் அமைந்துள்ள துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அதிலிருந்து மின் விநியோகம் பெறும் மாநகராட்சி பகுதிகளான, புதுரெட்டித்தெரு, பொன்விழா நகர், கிருஷ்ணன் கோயில் தெரு. பக்காளி தெரு, மத்தியபேருந்துநிலையம்,பீமநகர் கண்டிதெரு, பாரதிதாசன்சாலை, ராயல் சாலை, அலெக்ஸ்சாண்டர் சாலை, எபி பி ஐ காலனி, பென்வெல்ஸ் சாலை, வார்னஸ் சாலை, தென்னூர் அண்ணா நகர், குத்பிஷா நகர், தென்னூர் உழவர் சந்தை, ஜெனரல் பஜார், கீழ சத்திரம் சாலை, பட்டாபிராமன் சாலை, கேஎம்சி மருத்துவமனை, புத்தூர் நான்குவழிசாலை, அருணா தியேட்டர், கணபதிபுரம், வட்டாட்சியரக சாலை, வில்லியம்ஸ் சாலை, சோனா மீனா திரையரங்கம், நீதிமன்ற வளாகம், அரசு பொது மருத்துவமனை, பீமநகர், செடல் மரியம்மன் கோவில், கூனி பஜார், ரொனால்ட்ஸ் சாலை, லாசன்ஸ் சாலை, வண்ணாரப் பேட்டை, பாரதிதாசன் காலனி, ஈ.வெ.ரா.சாலை, வயலூர் சாலை, பாரதி சாலை உள்ளிட்ட பகுதிகளில், செப்டெம்பர் 17 ஆம் தேதி, சனிக்கிழமை காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மாநகராட்சியில் ஏற்படும் மின் தடை தொடர்பான புகார்களுக்கு 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

