
திருச்சி மாவட்டம் முசிறி அடுத்துள்ள தேருகுடி நாடார் காலனியை சேர்ந்தவர் தியாகராஜன் (48), லாரி டிரைவர். இவரின் மனைவி விஜயலட்சுமி (40). இவர்களது மகள் சுமதி (வயது 20), குளித்தலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பிஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
நாமக்கல் மாவட்டம் சேந்த மங்கலம் வடுகப்பட்டி அருந்ததியர் காலனியை சேர்ந்த ஆசைத்தம்பி மகன் மதியழகன் (வயது25). இவர் குளித்தலையில் உள்ள அரசு கல்லூரிக்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்காக சென்றார். அப்போது அங்கிருந்த சுமதியுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்து வந்தனர்.
இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடைய கடந்த 9 மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய சுமதி, மதியழகன் ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து சேந்தமங்கலத்தில் உள்ள மதியழகன் வீட்டில் சுமதி வசித்து வந்தார். இதனிடையே அடிக்கடி கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல் நேற்றும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட சுமதி நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது தனது சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சேந்தமங்கலம் போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும், திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் இதுகுறித்து நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மஞ்சுளா விசாரணை நடத்தி வருகிறார்….

