வ உ சி யின் பிறந்த நாள்:அதிமுக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.
திருச்சியில் வ உ சி யின் 151வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் அதிமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு
மாவட்ட செயலாளர் மு.பரஞ்சோதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இந்திரா காந்தி,,ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார்,
சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான்,பகுதி செயலாளர் டைமண்ட் திருப்பதி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

