திருச்சியில் இன்று 4 -வது மாடியில் இருந்து விழுந்து அதிகாரி மனைவி சாவு
மகள் வீட்டுக்கு வந்த இடத்தில் நேர்ந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
இன்று காலை நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சேலத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி.அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மதுரவல்லி (வயது 71). இவர் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதி ரெனால்ட்ஸ் ரோடு பகுதியில் பல மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு வந்திருந்தார் .
இன்று காலை நான்காவது மாடியில் கைப்பிடி சுவர் அருகில் உள்ள கட்டையில் படுத்து இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நான்காவது மாடியில் இருந்து மதுரவள்ளி தவறி கீழே விழுந்தார். இதில் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே மதுரவள்ளி துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருச்சி கன்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகள் வீட்டுக்கு வந்த இடத்தில் இந்த சோக சம்பவம் நடந்தது அனைவரையும் கவலைக்குள்ளாக்கியது.