திருச்சி ராம்ஜி நகரில் உள்ள காந்திநகர் மில் காலனியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவிற்கு திருச்சி மாநகர மேயர் அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கோவிலில் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது
இந்த கும்பாபிஷேக விழாவினை கோயில் விழா கமிட்டியினர் தன்சிங் தலைமையில் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.