திருச்சியில் எம்ஜிஆர் திறந்த கல்வெட்டை பெயிண்ட் அடித்து மறைத்த திமுகவினர்.உடனடியாக களமிறங்கிய சீனிவாசன் மற்றும் அதிமுகவினர்.
திருச்சி மேலப்புதூர்
(இரயில்வே சுரங்க பாதை) வேர்ஹவுஸை இணைக்கும் பாலத்தை தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சி காலத்தில் 1978ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு தொடங்கி வைத்த கல்வெட்டை திமுக அரசு பெயிண்டு அடித்து மறைத்ததை
எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளரும், திருச்சி மாநகர முன்னாள் மேயருமான ஜெ.சீனிவாசன் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி, அவைத் தலைவர் அய்யப்பன் மற்றும் அதிமுகவினருக்கு தகவல் அளித்தார் அதன் அடிப்படையில் அதிமுகவினர் நேரில் திரண்டு வந்தனர்.

பின்னர் மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக சரிசெய்து கொடுக்குமாறு வலியுறுத்தினார்கள்,
உடனடியாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கல்வெட்டை சரிசெய்யும் பணியினை மேற்கொண்டனர்.
இதில் பகுதி செயலாளர்கள்
அன்பழகன்,எம்.ஆர்.ஆர்.முஸ்தபா,
சுரேஷ் குப்தா, மற்றும் வரகனேரி சதீஷ்குமார், மலைக்கோட்டை சந்தோஷ் ராஜ்,அரவிந்தன்,ரோஜர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.