ஸ்ரீசெங்குளத்தான் குழுத்தலாயி அம்மன் குமரேசன் தற்காப்பு கலைக்கூடம் சார்பில் மாநில அளவிலான சிலம்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அன்பில் பெரியசாமி பரிசுகள் வழங்கி பாராட்டு.
திருச்சி உறையூர் சேஷ ஐயங்கார் நினைவு மேல்நிலைப் பள்ளியில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திரத்திற்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களை நினைவூட்டும் வகையில் ஸ்ரீசெங்குளத்தான் குழுந்தலாயி அம்மன் அ.குமரேசன் தற்காப்பு கலைக்கூடம் சார்பில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது.
இதில் திருச்சி,சென்னை,விருதுநகர்,தஞ்சை,கரூர்,மதுரை,சேலம்,நாமக்கல் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 350க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.
முதல் மூன்று இடங்களை வென்றவர்கள் விபரம்:-
1)முதலிடம் :பாரம்பரிய சிலம்ப பள்ளி தஞ்சாவூர்
2)இரண்டாமிடம் : சிவன் சிலம்ப பள்ளி கரூர்
3)மூன்றாமிடம் : சரவணன் சிலம்ப கூடம் திருச்சி.
மேலும் கலந்துக்கொண்ட அனைவருக்கும் அறுதல் பரிசும், சான்றிதழ்களையும்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி மாணவர்களுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.