திருச்சி கிரடாய் அமைப்பு சார்பில் பேர்ப்ரோ – 2022 வீடுகள் கண்காட்சி வரும் 13ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
இக்கண்காட்சி பற்றி சேர்மன் கோபிநாதன் கூறுகையில், 7-வது ஆண்டாக நடைபெறும் இக்கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட படைப்புகளை 36 நிறுவனத்தினர் காட்சிப்படுத்த உள்ளனர்.

மேலும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள வீடுகள் அனைத்தும் வங்கிகளால் அங்கீகரிக்கப்பட்டவை. இதற்காக 7 வங்கிகள் இங்கு முகாமிட்டுள்ளன.
இக்கணாட்சியில் வீடு வாங்குபவர்களுக்கு எங்களது உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு சிறப்பு சலுகைகளை வழங்குகின்றனர்.
மேலும் தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்றவையுடன், குடிபுகும் நிலையிலும், சில மாதங்களில் முடிவுறும் நிலையிலும் உள்ளன என்றார்.
பேடியின் போது உடன் செயலாளர் மனோகரன், கமிட்டி செயலாளர் முருகானந்தம், இணைத்தலைவர் மோகன், பொருளாளர் முகமது இப்ராஹிம் உட்பட பலர் உடனிருந்தனர்.