திருச்சி அருகே வீடு புகுந்து பெண்ணிடம் செயின் பறித்த மூன்று பேருக்கு போலீசார் வலை.
திருச்சியை அடுத்த இனாம்குளத்தூர் பகுதியை சோ்ந்தவா் சுமதி(வயது 42). இவா் நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மா்ம நபா் ஒருவா் கதவை தட்டியுள்ளார்.
அது தன்னுடைய கணவா் தான் என்று எண்ணி கதவை திறந்தபோது, அடையாளம் தெரியாத 3 போ் உள்ளே நுழைந்து அவா் கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தாலிச்சங்கிலியை பறித்து சென்றனா்.
இதுக்குறித்து சுமதி இனாம்குளத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 3திருடர்களையும் தேடி வருகிறார்கள்.

