
திருச்சி பீம நகரில் ஏழாம் ஆண்டு மாபெரும் கோபூஜை,
திருச்சியில் உலக நன்மை வேண்டி கோ-பூஜை, புனித தீர்த்த வேள்வி
திரளானோர் பங்கேற்பு.
திருச்சி பீம நகர் செடல் மாரியம்மன் கோவில் திடலில் தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பில் வரலட்சுமி நோன்பையொட்டி உலக நன்மை வேண்டி கோ-பூஜை மற்றும் புனித தீர்த்த வேள்வி நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பேரவையின் நிறுவனர் ரஞ்சித் குமார் தலைமை தாங்கினார். ரமேஷ், சித்தார்த்தன், தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோ பூஜையை ஸ்ரீ பிரம்மானந்த சரஸ்வதி சுவாமிகள் தொடங்கி வைத்து ஆசியுரை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

