Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சுப்ரமணியபுரம் அருளானந்தர் பேராலயத்தில் தீ விபத்து.

0

 

திருச்சி சுப்ரமணியபுரம் அருளானந்தர் பேராலயத்தில் தீ விபத்து.

திருச்சியில் வியாழக்கிழமை இரவு பேராலம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் பாதிப்பு ஏதுமில்லை.

திருச்சி , டி.வி.எஸ்.டோல்கேட் சுப்பிரமணியபுரம் பகுதியில் அமைந்துள்ளது அருளானந்தர் பேராலயம் உள்ளது.

இதிலிருந்து நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் புகை வெளியேறியது. இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது தீ விபத்து ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர் ஆனால் முடியவில்லை.

இந்த சம்பவம் பற்றி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு சிறப்பு நிலைய அலுவலர்கள் பிரான்சிஸ் மற்றும் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர்.

அதற்குள் பேராலய வளாகத்திற்குள் தீ மளமளவேன பற்றி எரிந்துகொண்டிருந்தது. விரைவாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதில் பல ஆயிரம் மதிப்புள்ள துணிகள், நாற்காலிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமானது.

இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை.

Leave A Reply

Your email address will not be published.