திருச்சியில் 2 பாடங்களில் பெயிலான விரக்தியில் கல்லூரி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை.
திருச்சியில் நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி சங்கரன்பிள்ளை ரோடு சுந்தர விலாஸ் ஸ்டோர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 48). இவரது மகன் விக்னேஸ்வரன் (வயது 22). இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் எம்.எஸ்.சி.
இரண்டாம் ஆண்டு டேட்டா சயின்ஸ் படித்து வந்தார்.
இவர் செமஸ்டர் தேர்வில் இரண்டு பாடங்களில் பெயிலாகி உள்ளார். இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்து உள்ளார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது விக்னேஸ்வரன் மின்விசிறியில் தனது அம்மாவின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .
இது குறித்து கிடைத்த தகவல் அடிப்படையில் கோட்டை போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து சிறப்பு இன்ஸ்பெக்டர் அரசு வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார் .
பாடங்களில் பெயிலானதால் கல்லூரி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.