திருச்சியில் திமுக அரசை கண்டித்து 26 ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க ஆவின் கார்த்திகேயன் அழைப்பு.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
26 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் தங்கமணி பங்கேற்பு.

மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் இணைப்பு கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி திமுக அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் வருகிற 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் அவைத்தலைவர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் ரத்னவேல், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சீனிவாசன், ஆவின் சேர்மன் கார்த்திகேயன்,
கவுன்சிலர் அரவிந்தன்,
புங்கனூர் கார்த்தி
மற்றும் அனைத்து பிரிவு நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் 26 ஆம் தேதி நடைபெறயுள்ள ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாக கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் ஓருமனதாக நிறைவேற்றப்பட்டன.