Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் அனுமதியின்றி பேனர்கள் வைத்த 21 பேர் மீது வழக்கு பதிவு.

0

'- Advertisement -

திருச்சியில் அனுமதியின்றி பேனர் வைத்த 21 பேர் மீது வழக்கு பதிவு.

Suresh

திருச்சி உறையூர் சோழராஜபுரம் பகுதியில் உள்ள தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பள்ளி அருகில் கோவில் திருவிழாவை முன்னிட்டு அனுமதி பெறாமல் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதை அடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து பேனரை அகற்றினர்..

அதே இடத்தில் வைத்திருந்த மற்றொரு தரப்பினர் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த பேனர்களும் அகற்றப்பட்டது.

அதேபோல் உறையூர் நாச்சியார் கோவில், ஜங்ஷன் பகுதியில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார பயணம் என்ற தலைப்பின் கீழ் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டு இந்து முன்னணியை சேர்ந்த 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த பேனர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.