திருச்சியில் அனுமதியின்றி பேனர் வைத்த 21 பேர் மீது வழக்கு பதிவு.

திருச்சி உறையூர் சோழராஜபுரம் பகுதியில் உள்ள தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பள்ளி அருகில் கோவில் திருவிழாவை முன்னிட்டு அனுமதி பெறாமல் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதை அடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து பேனரை அகற்றினர்..
அதே இடத்தில் வைத்திருந்த மற்றொரு தரப்பினர் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த பேனர்களும் அகற்றப்பட்டது.
அதேபோல் உறையூர் நாச்சியார் கோவில், ஜங்ஷன் பகுதியில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார பயணம் என்ற தலைப்பின் கீழ் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டு இந்து முன்னணியை சேர்ந்த 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த பேனர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.