பொதுமக்களின் அடிப்படை வசதிக்காக உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்த 47 வது வார்டு கவுன்சிலர் செந்தில்நாதன்,
திருச்சி மாநகராட்சி 47 வது வார்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழக கவுன்சிலர் செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் :
எங்களது 47-வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் (கொட்டப்பட்டு நியு கோல்டன் நகர், இந்திரா நகர், வெங்கடேஷ்வரா நகர், முத்து நகர்)உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை வேலை, கடந்த சில மாதங்களாக நடைபெறவில்லை

இப்பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.
குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் சொல்ல இயலாத துன்பத்துக்கு ஆளாகின்றனர்.
எனவே மிகவும் மந்தமாக, பொறுப்பற்ற முறையில் நடைபெறும் இப்பணிகளை கண்டித்தும், வரும் மழை காலத்திற்கு முன் இப்பணிகளை விரைந்து முடிக்க கோரியும், 12.07.2022 அன்று கொட்டப்பட்டு அருகே ஒரு நாள் பொதுமக்களுடன் இணைந்து அடையாள உண்ணாவிரதம் இருக்க உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதன் பின்னும் நடவடிக்கை எடுக்க விட்டால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் 47 வார்டு கவுன்சிலர் செந்தில்நாதன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.