திருச்சியில் அண்ணாமலை பங்கேற்கும் பாஜகவின் 8 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம். அனைவரும் திரளாக பங்கேற்க மாவட்ட தலைவர் ராஜசேகரன் அழைப்பு.
திருச்சியில் நாளை பாரதிய ஜனதா கட்சியின் 8 ஆண்டு கால சாதனை சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்பு.
அனைவரும் திரளாக பங்கேற்க மாவட்ட தலைவர் ராஜசேகரன் அழைப்பு.
திருச்சி புத்தூர் நால்ரோடு அருகே நாளை மாலை 5 மணி அளவில் பாரதிய ஜனதா கட்சியின் 8 ஆண்டு கால சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த மாபெரும் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்புரை ஆற்றவுள்ளார்.
புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் வரவேற்பு உரையாற்ற உள்ளார்.மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் முன்னிலை வகிக்கிறார்.
இக்கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர்கள், மாவட்ட பொருளாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் மண்டல் தலைவர்கள்,அணி பிரிவு நிர்வாகிகள்
மற்றும் இளைஞர் அணி, மகளிரணி, விவசாய அணி,சிறுபான்மையினர் அணி,மீனவர் அணி, நெசவாளர் பிரிவு, கலை கலாச்சாரப் பிரிவு, கல்வியாளர் பிரிவு, ஓபிசி அணி, முன்னாள் ராணுவ பிரிவு,அரசு தொடர்பு பிரிவு, பிரச்சார பிரிவு,மத்திய அரசின் நலத் திட்டங்களுக்கான பிரிவு, வழக்கறிஞர் பிரிவு, அமைப்பு சாரா பிரிவு,விளையாட்டு திறன் மேம்பாட்டுப் பிரிவு,மருத்துவப் பிரிவு,தமிழ் இலக்கியல் மற்றும் தமிழ் நலன் பிரிவு,கூட்டுறவு பதிவு உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு,வர்த்தக பிரிவு மற்றும் பொதுமக்களும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகரன் அழைப்பு விடுத்துள்ளார்.