Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எடப்பாடிக்கு ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவு உள்ளது.முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி பேட்டி.

0

'- Advertisement -

 

நிர்வாகிகளிடம் எடப்பாடிக்கு அமோக ஆதரவு.
முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.

முன்னாள் அமைச்சரும், திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான மு. பரஞ்ஜோதி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

ஒற்றை தலைமை இருந்தால்தான் மீண்டும் அதிமுக ஆட்சியை கொண்டுவர முடியும்.

அதிமுகவில் மொத்தம் உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 2 பேர் தவிர மற்ற அனைவரும் ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒற்றை தலைமை வரவேண்டும் என கூறுகின்றனர். அவர்களது அதரவு அலை எடப்பாடி பழனிசாமிக்கு வீசுகிறது.

Suresh

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திலும் அது எதிரொலித்தது.

ஓ.பன்னீர்செல்வம் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நிறுத்த டிஜிபிக்கு கடிதம் எழுதுகிறார். திருமண மண்டப மேலாளரும் கடிதம் எழுதுகிறார்.

திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின், டிடிவிதினகரன் , சசிகலா ஆகியோரை நம்பி ஓ பன்னீர்செல்வம் அரசியல் செய்கிறார்.
அவரின் ஆசை ஒருபோதும் நிறைவேறாது.

சசிகலா அதிமுகவில் இருந்து எப்போதோ நீக்கப்பட்டு விட்டார்.
அவர்களது குடும்பம் இனி எக்காலத்திலும் அதிமுகவில் நுழைய முடியாது.

அதிமுகவில் ஒற்றை தலைமை வந்தே தீரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.