சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு செந்தண்ணீர்புரம் பகுதியில்
மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மாநில துணைப் பொது செயலாளர் வெ.ரா.சந்திரசேகர் வைத்த மரங்களை பராமரிக்கும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை, மற்றும் நினைவு பரிசு வழங்கி பாராட்டு நிகழ்வு.

செந்தண்ணீர்புரம் முத்துமணி நகர் பகுதியில் சிறப்பு விருந்தினராக மரம் தாமஸ் கலந்துக் கொண்டு வழங்கினார்.
மேலும் “பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், துணிப்பையை எடுப்போம்” என்று கூறி பொது மக்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டது.
மக்கள் சக்தி இயக்க மாநில துணைப் பொது செயலாளர் வெ..ரா.சந்திரசேகர் தலைமையில் நடந்தது.
மக்கள் சக்தி இயக்கம்
மாநிலப் பொருளாளர் தண்ணீர் கே.சி. நீலமேகம், திருச்சி மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ, நிர்வாகி ஆர்.கே.ராஜா, தண்ணீர் அமைப்பு செயலாளர் கி.சதீஸ்குமார், சண்முகசுந்தரம், பாலகிருஷ்ணன், நரேஷ் மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்