
திருச்சியில் “இல்லாள்” ட்ரஸ்டி சார்பில் ஒரே இடத்தில் 1000 பெண்களின் ஒருங்கிணைத்து யோகா சாதனை செய்து புதிய சாதனை படைத்தனர்.
இந்நிகழ்வு ஆரோக்கிய பயணத்தில் திருச்சியின் பெண்களை செயல்பட வைத்துள்ளது.
இந்த வரலாற்று நிகழ்வை அங்கீகரித்து “விருக்ஷ்ஷா புக் ஆப் ரெக்கார்டு”. உலக சாதனை சான்றிதளை வழங்கியது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் மகளீரியல் துறை தலைவர் மற்றும் இயக்குனர் முனைவர் ந.மணிமேகலை ஆகியோர் கலந்துகொண்டு உலக சாதனை சாதனை படைத்தவர்களை வாழ்த்தி சான்றிதழ்களில் கையொப்பமிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் பயிற்சியாளர்களை வழிநடத்திய முதன்மை ஆசான்கள்
முனைவர் அகல்சர்மிளா, விக்னேஷ்வரி, சுகந்தி, வள்ளி ஆகியோர் வழி நடத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை திருச்சி போத்திஸ் நிறுவம் ஊக்கப்படுத்தியது. மேலும் கலந்து கொண்டவர்களை மேக்னா ஜூவல்லரி, திருச்சி எம்பிஆர் புட் போன்ற நிறுவனங்களும் ஊக்கப்படுத்தின.

