Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பிரபல ஹோட்டலில் பயங்கர தீ விபத்து. ரூ.4.5 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்.

0

 

திருச்சி பிரபல ஓட்டலில் பயங்கர தீ விபத்து.

திருச்சி தில்லைநகரில் உள்ள பிரபலமான ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. .இதில் ஆவணங்கள் உள்பட 4.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.

இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

திருச்சி தில்லை நகரில் தனியார் ஹோட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலின் நான்காவது மாடியில் மின்கசிவு ஏற்பட்டு திடீர் தீ விபத்து உருவானது .இந்த தீவிபத்தில் ஓட்டல் ஓட்டல் முழுவதும் தீ பரவியது .இதில் கம்ப்யூட்டர்,டிவி, லேப்டாப் ,பிரிண்டர், ஏசி மெஷின்கள், சிசிடிவி கேமரா ,
மரப்பொருட்கள், துணிகள், ஓட்டல் ஆவணங்கள் என சுமார் 4 5லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.

இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து கண்டோன்மென்ட் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மேலும் தீயை பரவ விடாமல் போராடி அணைத்தனர்.

இதுகுறித்து ஓட்டல் தொழில்நுட்ப மேலாளர் சத்தியசீலன் தில்லை நகர் போலீசில் புகார் கொடுத்தார் .புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.