திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில்வணிகர்கள் மாநாட்டுக்காக வைக்கப்பட்ட கொடிகள் சாய்ந்ததில் விபத்து ஏற்படும் அபாயம்.
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை.

திருச்சியில் கடந்த இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையின் காரணமாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நாளை நடைபெற இருக்கும் வணிகர் சங்கம் மாநாட்டிற்காக சாலைகளில் வைக்கப்பட்டுள்ள கொடிகள் கீழே விழுந்து உள்ளது..
இதனால் மிகப் பெரிய விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட உள்ளது. இதனை உடனடியாக கவனித்து மிகப் பெரும் விபத்தை தவிர்க்க உதவுமாறு வாகன ஓட்டிகள் கோரிக்கை.