கடந்த 10 ஆண்டுகளாக
மனைவியைப் பிரிந்து வாழ்ந்தவர் தூக்குப்போட்டு சாவு
அரியமங்கலத்தில் சம்பவம்
திருச்சி அரியமங்கலம் தொழிற்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சங்கிலி நாயக்கர். இவரது மகன் சுப்பிரமணி (வயது 46). இவர் கடந்த 10 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் விரக்தியில் இருந்த அவர் நேற்று வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.