Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அழுகிய நிலையில் ஜவுளி கடை ஊழியரின் பிணம்.

0

 

ஸ்ரீரங்கத்தில் குளியல் அறையில் பிணமாக கிடந்த ஜவுளி கடை ஊழியர்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் வீட்டு குளியலறையில் ஜவுளிக் கடை ஊழியர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

திருவரங்கம் சுப்பிரமணியபுரம் ரோடு செபஸ்தியார் புரத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் (வயது 62 ).இவர் திருவானைக்காவலில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார் .

இவரது மனைவி மற்றும் குழந்தைகள் சிங்கப்பூரில் வசித்து வருகின்றனர் .இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார். இந்நிலையில் இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. உடனே அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் ஸ்ரீரங்கம் சப் -இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பழனிவேல் வீட்டு குளியலறையில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.

உடனே பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் எப்படி இறந்தார்? கொலையா? தற்கொலையா?அல்லது இயற்கை மரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.